‘‘எங்கள் நிலத்தை வளமாக்க, ஏரியில் உள்ள வண்டல் மண்ணை எடுத்துப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகக் கேள்விப்பட்டோம். இதன் விவரங்களைச் சொல்லுங்கள்?’’
வே.நந்தகோபால், அன்னங்கால்.
சூழலியலாளர் ரமேஷ் கருப்பையா பதில் சொல்கிறார்.
‘‘தமிழ்நாடு அரசு 1959-ம் ஆண்டுச் சிறு கனிம விதி சட்டம் உட்பிரிவு 6-ன் படி ஏரி மற்றும் குளங்கள், ஆறுகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் அனுமதியின்றி எடுத்துப் பயன்படுத்தலாம். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட அரசாணையின்படி 10 யூனிட்டுக்கு மேல் விவசாயிகள் மண்ணை அள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை ரத்துச் செய்ய வேண்டும். விவசாய நிலங்களில் மண்வளம் காக்க அனைத்து ஏரி, குளங்களிலும் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்தக் கண்டராதித்த சோழன் பெரிய ஏரியில் மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் விவசாயிகள் வண்டல் மண் அள்ளும் போராட்டம் நடத்தினர். மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பல விவசாய அமைப்புகள், வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி வேண்டும் என தொடர்ந்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வந்தன.
‘‘தமிழ்நாடு அரசு 1959-ம் ஆண்டுச் சிறு கனிம விதி சட்டம் உட்பிரிவு 6-ன் படி ஏரி மற்றும் குளங்கள், ஆறுகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் அனுமதியின்றி எடுத்துப் பயன்படுத்தலாம். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட அரசாணையின்படி 10 யூனிட்டுக்கு மேல் விவசாயிகள் மண்ணை அள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை ரத்துச் செய்ய வேண்டும். விவசாய நிலங்களில் மண்வளம் காக்க அனைத்து ஏரி, குளங்களிலும் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்தக் கண்டராதித்த சோழன் பெரிய ஏரியில் மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் விவசாயிகள் வண்டல் மண் அள்ளும் போராட்டம் நடத்தினர். மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பல விவசாய அமைப்புகள், வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி வேண்டும் என தொடர்ந்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வந்தன.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு கனிமவளச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவந்தது தமிழக அரசு. ஒரு தனிநபர் விவசாயத் தேவைக்காக, 30 கனமீட்டர் வரை இலவசமாக வண்டல் எடுத்துக்கொள்ளக் கட்டணம் இல்லை. அதற்கு மேல் கட்டணம் செலுத்தி, வண்டல் எடுத்துக்கொள்ளலாம் என விதிகள் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் தான் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிடம் கோரிக்கை வைத்தோம். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் வண்டல் மண்ணை அள்ள அனுமதி அளித்தார். 
இதனை அடுத்து புதுக்குறிச்சி ஏரியில் 300 கனமீட்டர் வரை வண்டல் எடுத்துள்ளனர் அந்தப் பகுதி விவசாயிகள். ஒவ்வொரு விவசாயியும் 30 கனமீட்டர் அளவுள்ள வண்டலைக் கட்டணம் இல்லாமலும், அதற்கு மேல் ஒரு கனமீட்டருக்கு 25 ரூபாய் வீதம் கட்டணம் (இந்த கட்டணத்தின் அளவு மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபடும்) செலுத்தியும் எடுத்துள்ளனர்.
மேலும், மாதம் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும் தங்கள் பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், ஊருணிகளில் இருந்து வண்டல் எடுத்துப் பலன் பெற முடியும். வண்டல் எடுக்க விருப்பப்படும் விவசாயி, முதல்கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அல்லது ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் அடங்கிய குழு, சம்பந்தப்பட்ட நீர்நிலையில் எந்தப் பகுதியில் எவ்வளவு வண்டல் எடுக்கலாம் என ஆய்வுசெய்து அனுமதி அளிப்பார்கள். விவசாயி மனு அளித்த 30 நாள்களுக்குள் நடவடிக்கை எடுப்பார்கள்.
வண்டல் மண் அள்ளுவது குறித்துக் கடந்த ஆண்டு பசுமை விகடன் இதழில், விரிவான கட்டுரை வெளிவந்தது. அதைப் படித்த விவசாயிகள், உரிய அனுமதி பெற்று வண்டல் மண்ணை எடுத்துப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் இணையதளத்தில், வண்டல் மண் அள்ளுவது சம்பந்தமான அரசாணை பி.டி.எஃப் வடிவில் கிடைக்கிறது. அரசு அதிகாரிகள் வண்டல் மண் அள்ள அனுமதி தர மறுத்தால், இந்த அரசாணையைக் காட்டி, உரிய அனுமதி பெற முடியும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் கூடுதலான சில சிறப்புத் திட்டங்களையும் அரசு தரப்பில் செய்ய வேண்டும் என விவசாய அமைப்புகள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் ஏராளமான ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளைத் தூர் வாருவதற்கு அரசு தரப்பில் பல நூறு கோடிகளைச் செலவு செய்ய வேண்டும். இந்தத் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவு இருந்தாலே, அனைத்து ஏரிகளையும் எளிதாகத் தூர்வாரிவிடலாம். அதாவது, வண்டல் மண்ணை எடுப்பதற்கு விவசாயிகளிடம் எந்த விதமான கட்டணமும் வாங்கக்கூடாது. மேலும், ஜே.சி.பி இயந்திரம் மூலம் வண்டல் மண்ணை அள்ளி, லாரிகள் மூலம் எடுத்துச் சென்று சம்பந்தப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் இலவசமாகக் கொட்டும்படி செய்யலாம். இதனால், ஏரியின் ஆழமும் அதிகரிக்கும், விவசாயிகளின் நில வளமும் கூடி, நல்ல விளைச்சலும் கிடைக்கும்.’’
இதனை அடுத்து புதுக்குறிச்சி ஏரியில் 300 கனமீட்டர் வரை வண்டல் எடுத்துள்ளனர் அந்தப் பகுதி விவசாயிகள். ஒவ்வொரு விவசாயியும் 30 கனமீட்டர் அளவுள்ள வண்டலைக் கட்டணம் இல்லாமலும், அதற்கு மேல் ஒரு கனமீட்டருக்கு 25 ரூபாய் வீதம் கட்டணம் (இந்த கட்டணத்தின் அளவு மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபடும்) செலுத்தியும் எடுத்துள்ளனர்.
வண்டல் மண் அள்ளுவது குறித்துக் கடந்த ஆண்டு பசுமை விகடன் இதழில், விரிவான கட்டுரை வெளிவந்தது. அதைப் படித்த விவசாயிகள், உரிய அனுமதி பெற்று வண்டல் மண்ணை எடுத்துப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் இணையதளத்தில், வண்டல் மண் அள்ளுவது சம்பந்தமான அரசாணை பி.டி.எஃப் வடிவில் கிடைக்கிறது. அரசு அதிகாரிகள் வண்டல் மண் அள்ள அனுமதி தர மறுத்தால், இந்த அரசாணையைக் காட்டி, உரிய அனுமதி பெற முடியும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் கூடுதலான சில சிறப்புத் திட்டங்களையும் அரசு தரப்பில் செய்ய வேண்டும் என விவசாய அமைப்புகள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் ஏராளமான ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளைத் தூர் வாருவதற்கு அரசு தரப்பில் பல நூறு கோடிகளைச் செலவு செய்ய வேண்டும். இந்தத் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவு இருந்தாலே, அனைத்து ஏரிகளையும் எளிதாகத் தூர்வாரிவிடலாம். அதாவது, வண்டல் மண்ணை எடுப்பதற்கு விவசாயிகளிடம் எந்த விதமான கட்டணமும் வாங்கக்கூடாது. மேலும், ஜே.சி.பி இயந்திரம் மூலம் வண்டல் மண்ணை அள்ளி, லாரிகள் மூலம் எடுத்துச் சென்று சம்பந்தப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் இலவசமாகக் கொட்டும்படி செய்யலாம். இதனால், ஏரியின் ஆழமும் அதிகரிக்கும், விவசாயிகளின் நில வளமும் கூடி, நல்ல விளைச்சலும் கிடைக்கும்.’’
No comments:
Post a Comment